search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள விவசாயி தற்கொலை"

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் நெற்பயிர் அழுகியதால் விவசாயி மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் அருகே உள்ளது அடூர். இந்த பகுதியை சேர்ந்தவர் பழனன் (வயது 81). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் விவசாயத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர். தனது 8 ஏக்கர் நிலத்தில் கடன் வாங்கி நெல் பயிரிட்டார். ஆரம்ப காலத்தில் போதிய அளவு மழை பெய்ததால் நெற்பயிர் நன்கு வளர்ந்தது.

    இந்நிலையில் கடந்த 10 நாட்களாக பெய்த வரலாறு காணாத மழையால் வெள்ளம் 8 ஏக்கர் நெற்பயிரையும் சூழ்ந்தது. தொடர்ந்து மழை நீர் தேங்கியதால் நெற்பயிர்கள் அழுகத்தொடங்கின. இதனால் பழனன் வேதனை அடைந்தார்.

    அவரது மனைவி அம்சவேணி வெள்ளம் வடிந்து சரியாகி விடும் என்று அவருக்கு ஆறுதல் கூறினார். ஆனால் தொடர்ந்து மழை பெய்ததால் வெள்ளம் அதிகரித்து நெற்பயிர்கள் முழுவதும் அழுகியது. இதனால் விரக்தியடைந்த பழனன் வயலில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து ஆலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×